மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கல்லூரிகளில் பேரவை தேர்தல் நடத்திட வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.